திங்கள், அக்டோபர் 17, 2011

பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ?



وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمَنَّا بِالَّذِي أُنزِلَ إِلَيْنَا وَأُنزِلَ إِلَيْكُمْ وَإِلَهُنَا وَإِلَهُكُمْ وَاحِدٌ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ 
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்;கள்! ''எங்களுக்கு அருளப்பட்டதையும்> உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே ! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்று கூறுங்கள். திருக்குர்ஆன். 29:46



 பசுவின் இறைச்சியில் புழு இருப்பதில்லையா ?

இதற்கு முன் ''கோக்கும் பன்றியின் இறைச்சியும்'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்த ஹிந்து சகோதரர்கள் பலர் மாட்டிறைச்சியை சுற்றியேப் பலவாறான கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதில் ஒருவர் பசுவுடைய இறைச்சியில் மாத்திரம் புழுக்கள் இருப்பதில்லையா ? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். ( பசுவின் இறைச்சியை உண்ணுவது தவறு என்ற ரீதியில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது ).

இல்லை என்று திட்டவட்டமக கூறமுடியும் என்பதுடன் அது இறைவனால் மனித சமுதாயத்திற்கு உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதால் அனுமதிக்கப்பட்ட கால்நடைகள அசுத்தத்தை உண்டாலும் கூட அதனுடைய இறைச்சியில் புழுக்கள் உற்பத்தியாவதில்லை இது இறைவனுடைய ஏற்பாடு.

உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரிணங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றான்.

அதில் ஒன்று தான் இறைவனால் மனிதன் உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றி எத்தனை உயர்தர தீவணங்களை உட்கொண்டாலும் அதனுடைய இறைச்சியில் கொடிய நோயைப் பரப்பும் புழுக்கள் உற்பத்தியாகின்றது.

அதேப்போன்று இறைவனால் மனிதன் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட கால்நடைகளில் சில தாவரங்களில் மேயும்பொழுது சில நேரங்களில் புழுப் பூச்சிகளை விழுங்கக் கூடியவைகளாக இருந்தபோதிலும் அதனுடைய இறைச்சியில் புழுக்கள் உற்பத்தியாவதில்லை. இறைவன் இருக்கிறான் என்பதற்கு இதுவும் ஒருப் பெரிய சான்றாகும்.

பசுவதையின் பிண்ணனி
'' பசுவதை ''  '' பசுவதை '' என்று இன்று ஓலமிடும் ஆரியர்களின் மூதாதையர்களுடைய பண்டைய காலத்து பிரதான உணவே பசுவின் இறைச்சியாகும். என்பது அதிகமானோருக்குத் தெரியாது. அதேப்போன்று அவர்களுடைய வேதக்கிரந்தங்களில் எங்குமே பசுமாட்டை வணங்க வேண்டுமென்றோ அல்லது அதை அறுத்து உண்ணக்கூடாது என்றோ திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.

ஆரியர்களுக்கும், குப்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக ஆரியர்கள் விரும்பி உண்டு வந்த பசுவின் இறைச்சியை தடை செய்வதற்காக குப்த மன்னர்களால் இயற்றப்பட்ட சட்டம் தான் பசுவதை தடுப்புச் சட்டம்.

கி.பி. 200ல் தீண்டாமை இல்லை. கி.பி. 600ல் தீண்டாமை பிறந்தது என்று முடிவு செய்ய முடியும். புத்தமதத்தினரும் பிராமணர்களும் தங்களுக்குள் உயர்ந்தது யார் என்ற போட்டி போட்டதால் தீண்டாமை ஏற்பட்டது. குப்தமன்னர்களால் தான் பசுவதை ஒரு குற்றமாக ஆக்கப்பட்டது. ஆதார நூல்: தீண்டப்படாதவர் -டாக்டர் அம்பேத்கர் பக்கம் 168

பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த உயர் ஸ்தானத்தைப்பறிக்கவே. இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி உண்பவர்களாகவும் மாறினார்கள். ஆனால் அவர்களுடைய மனுசட்டம் மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை. ஆதாரநூல்:  தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 128

அக்னிக்காக குதிரைகள், காளைகள். எருதுகள், மலட்டுப்பசுக்கள், செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது  (எக்சு 91.14) ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.(72.6) ஆதார நூல்: தீண்டப்படாதவர்-டாக்டர் அம்பேத்கர். பக்கம் 94

விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும், செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா) ஆதார நூல்:  தீண்டப்படாதவர்- டாக்டர் அம்பேத்கர் .பக்கம் 95

1870ல் பசுவந்தணை என்கிற திருநெல்வேலி மாவட்ட கிராமத்தில் ரெட்டியார் ஒருவருக்கு குழந்தைப்பேறு இல்லாது போகவே பசுவை அறுத்து பிராமணர்களை வரவழைத்து விருந்துக்கொடுத்தார் அதில் பசுவின் தொப்புள் மாமிசத்தை பிராமணர் உட்பட மற்றவர்களும் உண்டது தெளிவாகப் பதிவு ஆகி இருக்கிறது. அந்த பிராமணர்களின் வழித் தோன்றல்களை நேரில் சந்தித்த ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார். ஆதார நூல்: சோமயாகப் பெருங்காவியம்

மேலோங்கத் தொடங்கியதும் முஸ்லிம்களுடைய வேதம் மாட்டிறைச்சியை உண்பதற்கு அனுமதி அளித்திருப்பதாலும், அதை முஸ்லிம்கள் விரும்பி உண்ணுவதாலும் இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து வருவதாலும் ஒரு உள்நோக்கத்துடன் ஆரியர்கள் பசுமாட்டுக்கு கோமாதா என்ற பெயர் சூட்டி கடவுள் தன்மையை ஏற்படுத்தினார்கள்

பாருங்கள் மன்னின் மைந்தர்களே! நாம் கடவுளாக வணங்குவதை முஸ்லிம்கள் அறுத்து உண்ணுகின்றனர் என்ற துர்பிரச்சாரத்தை செய்து இந்தியாவின் பூர்வீக குடிமக்களை தங்களுடைய சகோதரர்களுக் (முஸ்லிம்களுக்கு) கெதிராகத் தூண்டி விட்டனர்.

தங்களுடைய இஸ்டத்திற்கு சட்டத்தை வளைத்துக் கொள்வதற்காகத் தான் எங்களைத் தவிர யாரும் Nவுதம் ஓதக் கூடாது என்ற தகவலையும் சேர்த்தேக்கூறினார்கள்.

பசுவின் இறைச்சியை உண்பதற்கும், அதை கடவுளின் பெயரால் அறுத்து பலியிடுவதற்கும் ஆரியர்களிடத்தில் உள்ள வேதக் கிரந்தங்களில் தெளிவாக அனுமதிக்க்ப் பட்டிருக்கின்றன என்பதுடன் அதை வேத விற்பண்ணர்கள் என்று சொல்லக்கூடிய பண்டைய காலத்து ஆரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள வரலாற்றை மேலேக் கண்டோம்.

பசுவை விரும்பியவாறு அறுத்து உணவாக உட்கொள்வதற்கும், கடவுளின் பெயரால் அறுத்துப் பலியிடுவதற்கும் ஆரியர்களிடத்தில் இருக்கும் வேதக்கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கும் பொழுது பசுமாடு எவ்வாறு கோமாதாவாகியது ? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏகதெய்வக் கொள்கையை வலியுருத்தும் ஆரிய வேதக் கிரங்தங்கள்.
கண்ணில் கண்டதெல்லாம் கடவுளாக முடியாது என்றும், எந்த கண்ணும் காணாததுவே கடவுளாக இருக்க முடியும் என்றும், மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் ஒரே கடவுளுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற ஏகத்துவ தத்துவத்தையும் ஆரியர்களிடம் இருக்கும் வேதக் கிரந்தங்கள் பறைசாற்றுவதைக் காணலாம்.


கேனோ உபநிஷத் கூறுகிறது  
யச்ச க்ஷ ஷான பஸ்யதி யேன சஷ்யம் ஷி பஸ்யதி ததேவ ப்ரஹ்மத்வம் வித்தி நேதம் ய திதம் முபாஸதே யத் ஸ்ரோத்திரேன ந ஸ்ரூனோதி ஏன ஸ்ரோத்திரமிதம் ஸ்ருதம் த தேவ ப்ராஹ்மத்வம் வித்தி நேதம் யதித முபாஸதே கேனோ உபநிஷத் 1:6.7 


(எந்த ஒன்றைக் கண்கொண்டு காணமுடியாதோ> கண்ணிற்கு பார்வை வழங்கக்காரணம் எதுவொன்றோ அதுவே நீ பிரம்மம் என்று கொள். கண்கொண்டு காணும் எந்தவொன்றையும் மனிதர்கள் வணங்கினால்> அது பிரஹ்மமல்ல. ) 


பகவத் கீதை கூறுகிறது 
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்- கரீயான் நத்வத்ஸமோ ஸ்த யப்யதிக குதோஸன்ய லோகத்ர யேஸப்யப்ரதிம - ப்ரபாவ கீதை 11:43                                    


(ஒப்புயர்வில்லாத பெருமை வாய்ந்தவனே! நீ இந்த அசைவதும் அசையாததுமாகிய உலகிற்கு தகப்பனும் பூஜித்ததற்குரியவனும் பெரியவருக்குப் பெரியவனும் ஆகின்றாய்> மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் எங்ஙனம் ?


ரிக் வேதம் கூறுகிறது 
மானோ ஹிம்ஸூ ஜ்ஜ நிதாயஹ் ப்ருதிவ்யா யோ வா திவம் சத்ய தர்மா ஜஜான  யஷ்சா பஷ்சந்தரா ப்ருஹதீர் ஜஜான கஸ்மை தேவாய ஹவிஷா விதமே. ரிக்வேதம்10:121:9    


(எவர் பூமியை உண்டாக்கினாரோ> அதுபோல் உண்மையை நியாயமாக்கி வைத்துக் கொண்டிருக்கும் எவர் தெய்வாமிர்தத்தை உண்டாக்கினாரோ> எவர் நீரும் பெரிய பிரகாசத்தையும் உண்டாக்கினாரோ> அந்த படைப்பாளனே நம்மை பரிபாலிக்கின்றான். அப்படிப்பட்ட தான் தோன்றியான பரமாத்மாவை நாங்கள் பக்தியோடு வணங்குகின்றோம்.) 


அதர்வ வேதம் கூறுகிறது: 
ஏதம் தேவ மேக விருதம் வேத த்விதியோ ந த்ருதீயஷசதுர்தோ நா ப்ய சயதே ஏதம் தேவ மேகவ்ருதம் வேத பஞ்சமோ ந ஷஷடஹ் ஸப்தமோ நா ப்யூச்யதே ஏதம் தேவ மேகவ்ருதம் வேத ஷுமோ ந நவமோ தஷமோ நா ப்யூச்யதே ஏதம் தேவமேக வ்ருதம் வேத ஸர்வஸ்மை வி பஷயதி யச்ச ப்ராணதியச்சன ஏதம் தேவ மேக வ்ருதம் வேத தமிதம் நிஹதம் ஸஹஹ் ஸ ஏஷ ஏக ஏகவ்ருதேக ஏவ ஏதம் தேவ மேக வ்ருதம் வேத அதர்வ வேதம் த்ரியோ தஷகாண்டம் 4:4:14-19  


(எவனொருவன் எல்லாம் அறிந்தவனாகவுள்ளானோ> அவனே மேன்மை> மகிமை> ஆகாயம்> நீர்> பிரம்மச்சரிய பிரகாசம்> அன்னம் பஜனைகிரியை எல்லாம் ஏற்படுத்தியுள்ளான். அவனை ஒன்று என்றோ> இரண்டு என்றோ> மூன்று என்றோ> நான்கு என்றோ> ஐந்து என்றோ> ஆறு என்றோ> ஏழு என்றோ> எட்டு என்றோ> ஒன்பது என்றோ> பத்து என்றோ> கூறப்படுவதில்லை. அவன் நிலையான எல்லா வஸ்துக்களையும் தர்ஷிக்கின்றான்> அவன் அசாதாராணமானவனும் ஏகனுமாவான். இவையெல்லாம் அவனின் ஏற்பாடேயாகும்.) 
  
ஸ்வேதாஸதரோ உபநிஷத் கூறுகிறது:
தஸ்ய கார்யம் கரனம் ச வித்யதே தஸ்ய ஸமஸ்சா யதிகஸ் ச த்ருஸ்யதே பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா பாவிக ஜ்ஞான பல க்ரியா ச ஸ்வேதாஸதரோ உபநிஷத் (3:1) 


அந்த பரமாத்மாவிற்கு ஜீவிகளைப் போல சரீரமும் புலனுணர்வுகளும் இல்லை. அவனை விட பெரியவனோ அல்லது சமமானவரோ எவரும் இல்லை. அவனுடைய ஆற்றல் பலவிதத்தில் செயல்படுகின்றது. அவனுடைய ஞானமும் ஆற்றலும் அவனுக்கேயுரிய இயல்பாகும்.)


சிந்தியுங்கள் சகோதரர்களே ! 
  • அவனை ஒன்று என்றோ> இரண்டு என்றோ> மூன்று என்றோ> நான்கு என்றோ> ஐந்து என்றோ> ஆறு என்றோ> ஏழு என்றோ> எட்டு என்றோ> ஒன்பது என்றோ> பத்து என்றோ> கூறப்படுவதில்லை. என்று அதர்வ வேதம் கூறுகிறது 
  • ஏகனாகிய பரமாத்மாவே! இந்த பிரபஞ்சத்தை படைத்துத் தன்னுடைய மேலான கட்டளைகளைக் கொண்டு ஆட்சி செய்யவும் செய்கின்றான். என்று ரிக் வேதம் கூறுகிறது:மூவுலகிலும் உனக்குச் சமமானவர் இல்லை. இன்னும் மேலானவர் வேறொருவர் இல்லை என்று பகவத் கீதை கூறுகிறதுகண்கொண்டு காணும் எந்தவொன்றையும் மனிதர்கள் வணங்கினால்> அது பிரஹ்மமல்ல. என்று கேனோ உபநிஷத் கூறுகிறது.

ஏகஇறைவன் ஒருவனே! என்று பழமை வாய்ந்த ஹிந்து வேதங்கள் அடித்து ஆணித்தரமாக முழங்குகின்ற பொழுது  பசுவதை தடுப்புச் சட்டம் எங்கிருந்து வந்தது ? பசுமாடு எங்ஙனம் கடவுளாக மாறியது

உங்களிடம் இருக்கும் வேதங்களும், எங்களிடம் இருக்கும் திருக்குர்ஆனும் ஏகஇறைவன் ஒருவனே! என்று முழங்குவதால் அந்த ஓரிறைவன் உங்களுக்கும் எங்களுக்கும் சில கால்நடைகளை உண்டு புசிப்பதற்காகவும், இன்னும் பிற உபயோகத்திற்காகவும் படைத்துள்ளதாக கூறுகிறான். நீங்கள் ஏறிச்செல்வதற்காக உங்களுக்கு கால்நடைகளை அல்லாஹ்வே உருவாக்கினான். அவற்றிலிருந்து உண்ணுகிறீர்கள். திருக்குர்ஆன்.40:79 

ஏகஇறைவனுடைய கூற்றுக்கொப்பவே முஸ்லிம் சமுதாயமாகிய நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். உலக ஆதாயத்திற்காக இறைவேதத்திற்கு மாறாக ஒரு முடிவை மேற்கொள்ள மாட்டோம் , சில நேரங்களில் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு சில தவறுகளை செய்து விட்டால் அதைக் குற்றம் படிக்காNது இறைவா ! என்று இறைவனிடம் அழுது பாவமன்னிப்புக் கோருவோம் ஆனால் மனோ இச்சைக்குட்பட்டு செய்த தவறை குர்ஆன் கூறியது என்று  பொய் சொல்ல மாட்டோம்.

 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 
அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

“கோக்” கும் பன்றியின் இறைச்சியும்.



كَانُواْ لاَ يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُواْ يَفْعَلُونَ {79}
அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79.


 'கோக்' கும் பன்றியின் இறைச்சியும்.


பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் புழுக்கள் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியத்தை விட அதிகமானது. 

தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான் வரம்பு மீறாமலும், வழியச் செல்லாமலும், நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் திருக்குர்ஆன்.2:173

மனிதர்கள் உண்டு புசித்து உடலில் ஆரோக்கியம் பெறுவதற்காக கால்நடைகளை படைத்து அதனுடைய பாலை அருந்துவதற்கும், அதனுடைய இறைச்சியை உணவாக உட்கொள்வதற்கும் அனுமதி அளித்தான் இறைவன்

கால்நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம் அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன அவற்றை உண்ணுகின்றீர்கள். திருக்குர்ஆன் 23:21.


அதே கால்நடைகளில் மனிதனுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய சில கால்நடைகளை அறிந்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடைசெய்தான் அதில் முக்கியமாக பன்றியின் இறைச்சியைக் கூறி தடை செய்தான் பார்க்க திருமறை வசனங்கள். 4:3, 5:60, 6:145, 16:115 மனித சமுதாயத்திற்காக அல்லாஹ் தடைசெய்த ஒன்றில் நிச்சயமாக தீங்கு இருக்கவேச் செய்யும்.

இஸ்லாமிய எழுச்சியால் மற்ற எந்த மதத்தை விடவும் பெரும் வீழ்ச்சியை தழுவியது கிருஸ்தவ மதம் என்பதால் அதிகபட்சம் இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமாக நடப்பதை அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கொள்கை(?)யாகவேக் கொண்டுள்ளனர். 

அவர்களது கொள்கை(?)யின் அடிப்படையில் அல்லாஹ் தடுத்த விபச்சாரத்தை வெட்க உணர்வுகளை உதிர்த்து விட்டு பகிரங்கமாகச் செய்து அதைப்பார்த்து பிறரும் அதைசெய்வதற்காக உலகம் முழுவதும் பல்கி பரவச்செய்வதற்கு ஊடகத் துறையை பயன்படுத்தி எயிட்ஸ் எனும் கொடிய நோயை உலகம் முழுவதும் பரவச் செய்து அதில் ஈடுபடுபவர்களையம் பாதிக்கச் செய்தனர், ஈடுபடாதவர்களையும் பாதிக்கச் செய்தனர்.

அல்லாஹ் தடுத்த பன்றியின் மாமிசத்தை உண்டு அதன் மூலம் மூலைக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை உலகுக்குப் பரவச் செய்ததிலும் பெரும் பங்கா(?)ற்றி சாதனை படைத்தவர்கள்.
  • மேல்படி கால்நடையின் மாமிசத்தில் புழுக்கள் உற்பத்தியாவதை அவர்களே கண்டுப் பிடித்து முதலில் அறிவித்தனர்.
மேல்படி புழுக்களைக் கொண்ட மாமிசம் மனித உடலுக்குள் சென்றதும் மாமிசம் முழுவதும் இரப்பைக்குள் சென்று செரிமானம் அடைந்ப் பின்னரும் அதனுள் இருக்கும் புழுக்கள் மட்டும் சாகாமல் தங்கி விடுகின்றது. அவ்வாறு தங்கிக் கொண்ட அந்த புழுக்கள் பல விதமான நோய் கிருமிகளை உருவாக்குகிறது அதில் முக்கியமாக மூலை காய்ச்சலை ஏற்படுத்தி மரணத்தை தழுவச் செய்கிறது.


அதற்கடுத்து
  • மேல்படி மாமிசத்தை ஒரு பாத்திரத்திலிட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆய்வு செய்த வகையில் மொத்த மாமிசமும் கரைந்து பஸ்பமாகிய பின் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் மாமிசத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மட்டும் வீரியமாக நெளிந்து கொண்டிருந்ததை இரண்டாவது கட்டமாக அவர்களே உலகுக்கு அறிவித்தார்கள்.
இன்றும் நமது நாடுகளில் பன்றிகள் வளர்க்கும் இடங்களைச் சுற்றியுள்ள மக்களை மூலை காய்ச்சல் தாக்கி அதிகமான பேர் இறப்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம். 

மூலைகாய்ச்சல் அதிகரிக்கும் பொழுது பன்றிகளை ஒழிக்க ஊராட்சித்துறை உத்தரவு பிறப்பிக்கும், இன்றும் இந்தியாவில் ஊராட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊரின் ஒதுங்குப் புறங்களில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முக்கியகாணரம் அவர்கள் பன்றிகளை வளர்ப்பதுவேயாகும்.

ஆசிய நாடுகளில் வளரும் பன்றிகள் மனித கழிவுகளை உண்பதாலும் சேறு, சகதிகளில் உருண்டுப் புரளுவதாலுமே மூலை காய்ச்சல் போன்ற நோய் கிருமிகளைப் பரப்புகிறது. ஆனால் மேலை நாடுகளில் பன்றிகளுக்கு தனித் தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதால் அதனுடைய மாமிசத்தை உண்டு வருகின்றோம் என்றக் கருத்தை பன்றியின் மாமிசத்தை உண்ணும் சமுதாயத்தவர்கள் கூறுகிறார்கள்.

மேலை நாடுகளில் அவ்வாறு தனித்தொழுவம் அமைக்கப்பட்டு உயர்தர தீவணங்களிட்டு வளர்க்கப்படுவதை நாமும் ஊடகங்கள் வாயிலாக கண்டு வருகிறோம் மறுக்கவில்லை அவ்வாறு வளர்க்கப்படுவதால் மட்டும் 


அதனுடைய இறைச்சியில் வளரும் உயிருக்கு உலை வைக்கும் நாடாப் புழுக்களை ஒழித்து ப்யூர் மட்டனாக மாற்ற முடிந்ததா என்றால் ? முடியவில்லை ! முடியாது !


  • என்ன தான் கழுவி குளிப்பாட்டினாலும் காகம் கொக்காகாது


உயிரினங்களின் மீது இறைவனுடைய இயற்கை அமைப்பை இதுவரை எவர் மாற்றி அமைத்து சாதனைப படைத்தார்கள் ? கூற முடியுமா ? 

சமீபத்தில் மேல்படி மாமிசத்தில் இரண்டு பீஸ்களை ஒரு தட்டிலிட்டு அதன் மேல் 'கோக்' பாணத்தை ஊற்றியதும் மாமிசத்தின் உள்ளே இருந்த புழுக்கள் நெளிந்து மேல் நோக்கி வருவதை வீடியோ மூலம் பதிவு செய்து மூன்றாம் கட்டமாக அதை உண்பவர்களே உலகுக்கு அறிவித்துள்ளார்கள். அதன் கிளிப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.




    மேற்கானும் வீடியோ கிளிப்பின் மூலம் மனித சமுதாயத்திற்கு இரண்டு படிப்பினைகள் இருப்பதை கவனிக்கலாம்.
    • பன்றியின் மாமிசத்திற்குள் இருக்கும் உயிருக்கே உலை வைக்கும் புழுக்கள்.
    • நாம் தினந்தோறும் பருகும் 'கோக்' வகை பாணங்களில் இருக்கும் அமிலத்தன்மையின் வீரியம்.
    மேல்படி மாமிசத்தின் மீது ஊற்றும் கோக் பாணத்தின் அமிலத் தன்மையில் எந்தளவுக்கு வீரியம் இருந்தால் உள்ளுக்குள் இருக்கும் புழுவால் நிலை கொள்ள முடியாமல் மேல் நோக்கி வந்திருக்கும் ?

    அந்தளவுக்கு அதிகப் பவர் உள்ள அமிலம் கலந்த பெப்சி, கோக் போன்ற மனித வர்க்கத்தை அழித்து பணம் பண்ணும் யூத தயாரிப்புகள் உடல் நலத்திற்கு பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை அதனுடைய அமிலத் தன்மைகளின் அளவைக் கண்டு பிடித்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப் பட இருந்ததை மேல்படி யூத கம்பெனிகள் அப்போதைய அமைச்சர் சுஷ்மிதா சுவராஜை முறையாக கவனித்து தடை உத்தரவை வாபஸ் பெறச் செய்தார்கள்.

    மேல்படி கோக் தொழிற்சாலையை கேரளாவில் அமைக்க இருந்ததை கேரள மக்கள் முணைப்புடன் எதிர்த்து ஓட ஓட விரட்டி அத்தார்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

    இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் கோக் பாணங்களில் அமிலத்தன் அளவைக் குறைத்து தயாரிக்ப்படுவதையும் ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

    இதில் கொடுமை என்னவென்றால் இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பாவை விட அரபுநாடுகளில் கோக் வகை பாணங்கள் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

    அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர் அவர்கள் செய்தது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 5:79.


    وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


    3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்